Thursday, June 28, 2012

கொங்கு குலகுருக்கள்

Thursday, September 24, 2009

குலகுருவின் மகத்துவம்


 
 || ஶ்ருதி ஸ்மிருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்
                    நமாமி பகவத் பாதம் சங்கரம் லோக சங்கரம் ||

தெளிவு குருவின் திருமேனி காணல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே!
- திருமந்திரம்

குரு என்றால் இருளை விலக்குபவர் என்று பொருள். மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற நமது மரபில் நமது முன்னோர் சிறந்து விளங்கினர். மாதாவால் நாம் உண்டாகிறோம், பிதாவால் குலம் வருகிறது. இங்ஙனம் வரும் குலத்தால் நமது குலகுருவும், குலதெய்வமும் கிடைக்கின்றன.
ஆயிரம் தாய்மார் இருந்தாலும் நமது தாய் வழியாகத்தானே தாயன்பை பெற்று உணர்கிறோம்! அதேபோல ஆயிரம் குருக்கள், தெய்வங்கள் இருப்பினும் நமது குலகுரு, குலதெய்வம் மூலமே நன்மை சித்திக்கும்.

தாய் தந்தையைக் காட்டுகிறாள், தந்தை குருவையும், குரு தெய்வத்தையும் காட்டுவதே நமது மரபு. தேவர்களுக்குக் குலகுரு பிருகஸ்பதி, அசுரர்களுக்கு சுக்கிராச்சாரி. இவர்கள் தத்தம் சிஷ்யர்களுக்கு நன்மை செய்யும் பொருட்டே செயல்கள் புரிந்து வந்ததனைக் காண்கிறோம். இதேபோல் அரசர்கள்தம் குலகுருக்கள் அவ்வரசர்களுக்கு நல்வழி காட்டியதனையும் ராமாயணம் போன்ற இதிகாசங்களின் வழி அறிகிறோம்.

குருவின் மகத்துவத்தினை உணர்த்த திருமூலர் தமது திருமந்திரத்தில் குருவே மனிதனுக்கு சிவம் என்கிறார்:

"குருவே சிவம் எனக் கூறினன் நந்தி
குருவே சிவம் என்பது குறித்தோரார்
குருவே சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும்
குருவே உறையுணா பெற்றதோர் கோவே"

இதே கருத்தினை ஆதிமறையாகிய வேதங்களும் கூறுகின்றன :

"குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணு
குருர் தேவோ மகேச்வர:
குருர் ஸாக்ஷாத் பரப்ரஹ்மா
தஸ்மை ஸ்ரீகுரவே நம:"


(பொருள்: குருவே பிரம்மன் அதாவது படைப்பவர், அவரே விஷ்ணு மற்றும் சிவன், அதாவது காத்து, மாற்றமும் அளிப்பவர் என்பதால் அவரே சாட்சாத் கடவுளுமாகிறார். அத்தகைய குருவினை நமஸ்கரிக்கிறேன்)

கொங்கதேசத்தில் இதனை உணர்ந்தே இத்தேசத்திற்கான பூர்வகுடிகள் 51 ஆதிசைவ ஆதீனங்களைநிறுவினர். இவ்வாதீனங்கள் குருகுலங்கள், குருமடாலயங்கள் என்று அழைக்கப்பட்டன. "அய்யம்பாளையம்", "குருக்கள்பட்டி" , "குருக்கள்பாளையம்" என்று ஊர்களையே கொங்கர் தத்தமது குருக்களுக்களித்து மகிழ்ந்தனர். கொங்கர் கொங்கதேசம் வருகையிலேயே குருக்களையும் அழைத்து வந்தனர் என கொங்கு காணிப்பட்டயம் கூறுகிறது (கொங்கு வெள்ளாளர் செப்பேடு பட்டயங்கள் (2007), கொங்கு ஆய்வு மையம், புலவர் செ. ராசு).

குருக்களே அக்காலத்தில் திருமணங்களை நிச்சயித்து வந்துள்ளனர். இதனை மங்கலவாழ்த்தில் "வேதியன் பக்கம் விரைவுடனே சென்று" என்ற வரி மூலம் உணரலாம். கொங்கர் திருமணத்தின் ஆரம்பமே இதுதான். ஏனெனில் பிரும்மச்சாரிகள் அனைவருக்கும் குருவே பொருப்பு. இதனால்தான் "பிரும்மச்சரியங்கழித்தல்" என்ற சீரும் உள்ளது.

இதேபோல் கைகோர்வை சீரின் பொழுது குருக்கள் மறைகூறி ஆசி தந்துள்ளனர். இதனை மங்கலவாழ்த்தில் "மறையோர்கள் ஆசிகூற" என்ற வரிமூலம் உணரலாம். இவ்வாறு திருமணம் நிச்சயிக்கவும், ஆசி கூறவும் செய்த குருக்களுக்கு "மங்கிலியவரி" எனும் மாங்கல்யவரியையும் செலுத்தி வந்துள்ளனர்.

மேலும் குருவிடம் பாதபூசை செய்து, சஞ்சார காணிக்கையாக அவர்களால் முடிந்ததை மனமுவந்து அளித்து, அவர் சொற்படி தீட்சை மகாமந்திரம் உபதேசம் பெற்றுவந்துள்ளனர். ஒவ்வொரு ஆதீனத்திடமும் குறைந்தது 50 தலைக்கட்டுக்கான காணிக்கைக் கணக்கு ஓலைகள் உள்ளன. இவை சரித்திர ஆவணங்களாகும்.

இன்றும் குலகுருக்களை போற்றும் கோத்திரத்தார் நன்றாக பல்கிப்பெருகி உள்ளனர். ஏனெனில் அவர்களுக்கு நிரந்தர குருபலம் உண்டு. இவற்றை சரியாக செய்யாமல் குருவுக்குக்கொடுத்த வார்த்தை தவறியவர்களே திருமணமின்மை, துன்பங்கள், குடும்பச்சிக்கல்கள், குழப்பங்கள் போன்று துன்பங்களுக்கு ஆளாகின்றனர்.

என்னுடைய அனுபவத்தில் குலகுருக்களை மீண்டும் கண்டு ஆசிபெற்று துன்பங்களினின்று மீண்டு வாழ்பவர்கள் ஏராளம். குலகுருவால் தீராத பிரச்சனைகளே இல்லை.

"குரு பார்க்க கோடி நன்மை" என்பது பழமொழி
"குருபீடம் உயர குடி உயரும்" குரு எவ்வாறு உள்ளார் என்பதனைக் கொண்டே குடிகளின் நிலையும் இருக்கும் என்பது கண்கண்ட உண்மை.

திருமந்திரத்தில் ஆறாம் தந்திரத்தில் சிவகுரு தரிசனம் பற்றிய பதிகங்கள் மேலும் குருவின் சிறப்புகளை விவரிக்கின்றன:
http://www.tamilvu.org/slet/servlet/l4100.l41A0son?x=1549&y=1564

மேலும் குருபுஜை என்ற ஏழாம் தந்திரப் பதிகங்கள் குருவின் சிறப்புகளை கூறுகையில்:
http://www.tamilvu.org/slet/servlet/l4100.l41A0son?x=1814&y=1821


கட்டுரை ஆசிரியர் தொலைபேசி : 91 - 424 - 2274700

British accounts on our spiritual system (ultimately used by their and our government to destroy the system):



Account 1:

"Their Gurus are the Siva Brahmanas, or Brahmans who act as Pujaris in the temples of
Siva, and the great gods of his family. These are considered as
greatly inferior to the Smartal, either Vaidika, or Lokika. The
Guru comes annually to each village, distributes consecrated
leaves and holy water, and receives a Fanam from each person,
with as much grain as they choose to give. Some of them purchase an Upadesa
from the Guru; giving for it, according to their circumstances,
from one to ten Fanams. Those who have procured this may make
a Lingam of mud, and perform Pujas worship to this rude emblem
of the deity, by pouring flowers and water over it while they repeat
the Upadesa. Such persons must abstain entirely from animal food.
Those who have no Upadesa must pray without any set form, but
are allowed to eat the flesh of sacrifices." Pg 330.

- FRANCIS BUCHANAN, M. D, Vol. II, JOURNEY FROM மெட்ராஸ் THROUGH THE COUNTRIES OFMYSORE, CANARA, AND MALABAR, 1807



Account 2:

"Each Nad has its Brahman Guru. The Guru of Morur and
Molasi Nads is by caste a Gurukkal, and he lives in Natta-
Kadayur , in Kangayam Nad of Coimbatore. The Gurus of
Malla-samudram and Parutti-palli Nads are also Gurukkal
Brahmans, the Guru of the former living at Ayyam-palaiyam, in
Paramati Division, his title being Immudi Sitambala Nayinar,
and the Guru of the latter Nad residing at Kallan-kulam in Salem
Taluk. The Guru of Easipuram Nad is a Dikshitar and lives at
Pasur in Erode Taluk."

- F. J. Richards, ICS, Salem, Madras district gazetteers, Vol.1, 1918

Website of Nagasamy, Director, TN Archeology dep.,
http://www.tamilartsacademy.com/journals/volume5/articles/article7.xml

Wikipedia:
http://en.wikipedia.org/wiki/Kongu_Vellalar#Honoured_Saivacharyas



Account 3:

"Konganattu Brahman", a separate and distinct community in kongu region was referred in the following document (Page 6).
Report on the various census of British India, Eyre and spottis woode printing, London , Page 6, Volume III, 1881

Account 4
The former Archeological Survey of Tamilnadu Director Thiru. Nagaswamy have referred about Kongu Shiva Brahmanars and their Gothrams in his website.

Account 5:

கொங்கு மண்டலத்தில் சோழன் ஸ்ரீகாழி பிராமணர்களை குடியேற்றும் முன்பே கொங்கு நாட்டில் குருத்வமும் உடைய பிராமணர்களும், ஸ்தானிகர்களும் இருந்தததாக கார்மேக கவிஞர் கொங்கு மண்டல சதகத்தில் கூறியுள்ளார்.
  "குலசேகரன் குலோத்துங்கன் துங்கசீர்ச் சோழர்கள் கொங்கிடைமெய்த்
   தலபூசை நன்குறத் தன்னாடு உலாரிற் சமர்த்தர் கண்டு
  நிலையான காணியும் மென்மையு மிய நிதானமுற்று
 வலவாதி சைவர்கள் வாழ்வதன்றோ கொங்கு மண்டலமே"
 .......Þ¶ «ð£ô«õ ªè£é¢° ñí¢ìô÷¢÷
ñø¢ø îôé¢è÷¤½ñ¢ ï¤Áõ¤ù£ù¢. «ê£öù¢ °®«òø¢ø¤ò ê¤õî¢õ¤üó¢èÀ袰ñ¢ 
ºù¢ùñ¢ Þé¢è¤¼ï¢îõó¢èÀ袰ñ¢ ê¤ô ê£ñ¢ð¤óî£ò «ðîé¢è÷¤¼è¢è¤ù¢øù. Üõó¢è÷¢ è¤ó£ñ£ï¢îóé¢è÷¤ô¢ Ìüèó¢è÷£»ñ¢, ï£ì¢´è¢ °¼î¢õº¬ìòõó¢è÷£»ñ¢ Þ¼è¢è¤ø£ó¢è÷¢. ¹î¤òõó¢è÷¢ ð£ìô¢ ªðø¢ø îôé¢è÷¢, ñø¢Áñ¢ ð¤óî£ù Ýôòé¢è÷¤ô¢ Üó¢ê¢êèó¢è÷£»ñ¢ Ýê£ó¤òî¢õº¬ìòó¢è÷£è¾ñ¢ õ£ö¢ï¢¶ õ¼è¤ø£ó¢è÷¢."
- கார்மேக கவிஞரின் கொங்கு மண்டல சதகம், 55 வது பாடலின் விளக்கவுரையில்

கொங்க பிராமணர்களுக்கும் சோழிய பிராமணர்களுக்கும் உள்ள வித்தியாசங்கள்.  



கொங்க பிராமணர்கள்சோழிய பிராமணர்கள்
கொங்க தேசத்தில் தொன்றுதொட்டு பூர்வ குடிகளாக வாழ்ந்து வரும் பிராமணர்கள்சோழ தேசத்தை பூர்விகமாக கொண்டவர்கள்
கலியாண நிச்சயம் மணப்பெண்ணின் வீட்டில் நடைபெறும்..கலியாண நிச்சயம் மாப்பிள்ளை வீட்டில் நடைபெறும்...
திருமணம் பெண்வீட்டில்தான் நடைபெறும்....திருமணம் இரு வீட்டாருக்கும் பொதுவான இடத்தில் நடைபெறும்
பெண்ணுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நாடு கொங்கு நாடு..  ஆனால், அதே சமயம், அதிக கட்டுப்பாடுகளும் இருக்கும்..அதிக முக்கியத்துவம் பெண்ணுக்கு தரப்படுவது இல்லை.  கட்டுப்பாடுகளும் கொஞ்சம் கம்மிதான்
கல்யாணம் செய்த பின், மனைவியோடு வந்தால்தான் தீட்சை  கிடைக்கும்கல்யாணத்துக்கு முன்னமே தீட்சை வாங்கலாம்
குழந்தை பெற்று சாந்தி ஆனால்தான் ஆச்சார்ய அபிஷேகம்..குழந்தை பெறுவதற்கு முன்பேவும் ஆச்சார்ய அபிஷேகம் செய்து கொள்ளலாம்
தாய்மாமா தான் பெண்ணுக்கு முதல் மாலை போடுவார்..இல்லை
இணைச்சீர் உண்டு..  கொங்கு நாட்டில் மட்டுமே உள்ள ஒரு வழக்கம்இல்லை....
மாப்பிள்ளையே மணப்பெண் கைப்பிடித்து கூட்டி வர வேண்டும்..நாத்தனார்தான் பெண்ணை கூட்டி வர வேண்டும்...
நிறைகுடம் கையில் வைத்து கொண்டுவரப்படும்..நிறைகுடம் தலைக்கு மேல் வைத்து கொண்டுவரப்படும்..







Tamil Calendar - Daily(2007 - 2011)


Gadgets powered by Google




சேர கொங்க தேசத்தின் குலகுருக்களுக்குச் சங்கராச்சாரியாரும் தென்னாட்டின் சங்கராச்சாரியாருமான 
ஸ்ரீ சிருங்கேரி பாரதி தீர்த்த ஸ்வாமிகள் அருளாசியுடன்
http://www.sringeri.net/

 கொங்கதேச சரித்திர கலாச்சார கேந்திரம், ஈரோடு. 

Wednesday, September 23, 2009

கொங்கு குலகுருக்கள் 1. பூந்துறை நாட்டு கொங்கு வெள்ளாளர் குலகுரு - பாசூர் மடம்

கொங்கு குலகுருக்கள் 1. பூந்துறை நாட்டு கொங்கு வெள்ளாளர் குலகுரு -
ஸ்ரீமத் வேதமார்க பிரதிஷ்டாபனாச்சார்ய சத்யோஜாத ஞான சிவாச்சார்ய
பாசூர் மடம்
மேல்கரை பூந்துறை நாட்டு தற்போதைய குலகுரு
ஸ்ரீ சாம்பசிவ தீக்ஷதர்
பாசூர் சின்ன மடம் 



குருபாதம்





பாசூர் பெரிய மடம் - பாசூர்

கைலாயவாசி பெரியமடம் ஸ்ரீ வெங்கடேச தீக்ஷதர் அய்யா



பல்லக்கு




பாசூர் குருக்கள் செப்பேடு


மூலம்

ஸ்வஸ்திஸ்ரீ சாலிவாஹன சகாப்தம் 1258 கல்லியப்தம் 4477 யிதுமேல் செல்லாநின்ற தாது வருசம் தை மாதம் சுக்கில பச்சமும் வெள்ளிக்கிளமையும் பஞ்சமியும் மிருகசீருஷ நட்சத்திறமும் பாலவாகறணமும் பெத்த சுபதினத்தில் ஸ்ரீமது ராஜாதிராஜ ராசாபரமேசுவரன் ராசகெம்பீறன் ஆணைகுந்தி சமஸ்தானத்தில் புக்கறாயறவர்கள் றத்தின சிம்மாசனருடராய் பிறிதிவி சாம்பிறாச்சியம் அருளாநின்ற காலத்தில் சீரங்கப் பட்டிணத்தில் கண்டீரவ நரசறாயர் துரத்தினத்தில் மதுறையரச னாளையில் மேல்கரைப் பூந்துறை நாட்டுக்குச் சேந்த பேரோட்டுக்குப் பிறதிநாமதேயமான விருப்பாட்சிபுரத்திலே யிருக்கும் ஞானசிவாச்சாரியார் இம்முடி அகிலாண்ட தீக்ஷதர் சுவாமியாற் பாதம் மறவாதவறான

மேல்கரைப் பூந்துறை நாட்டிற் காடை கோத்திரம், வெள்ளோடு சாத்த்தந்தை கோத்திரம், பயறன் கோத்திரம், நசையநூறு கண்ணன் கோத்திரம், செம்பன் கோத்திரம், பூச்சந்தை கோத்திரம், கூறை கோத்திரம், கீறை கோத்திரம், பாண்டியன் கோத்திரம், யீஞ்சன் கோத்திரம், யெழுமாத்தூறு ஊராட்சிக்கோட்டை பனங்காடை கோத்திரம், செல்லன் கோத்திரம், காறி கோத்திரம், அனுமன்பள்ளி செல்லன் கோத்திரம், அனுமன்பள்ளீ கூடலூரு பண்ண கோத்திரம், யீங்கூறு ஈஞ்ச கோத்திரம், தோடை கோத்திரம், முருங்கத்தொழுவு பெரிய கோய்த்திரம், திருவாச்சி ஓதாளன் கோத்திரம், அந்துவன் கோத்திரம், ஆந்தை கோத்திரம், பெருந்துறை சாகாடை கோத்திரம், கனகபுரம் எலவமூலை சாத்தந்தை கோத்திரம், காளமங்கலம் கண்ணன் கோத்திரம், ஊத்துக்குளி வண்ணக்கன் கோத்திரம், சத்தியமங்கலம் பில்லன் கோத்திரம், செம்பன் கோத்திரம், மொடக்குறிச்சி தூறன் கோத்திரம், காறி கோத்திரம், கிளாம்பாடி கண்ண கோத்திரம், பிடாறியூறு பெறழந்தை கோத்திரம், கூற கோத்திரம், கண்ண கோத்திரம், கொல்லன்கோயில் பேரோடு வெண்டுவன், பண்ண கோத்திரம், கொடுமணல் பனங்காடை கோத்திரம், பாண்டியன், சேரன் கோத்திரம், மேல்கரை பூந்துறை நாட்டாரும், கிராமத்தாரும் கூடி எழுதிக்கொடுத்த தலைக்கட்டுக்குத் தாம்பற சாதனம்.

சாசனமாவது குருசுவாமியார் பாதத்துக்கு உடல் உயிறு பொருள் மூன்றும் குரு பாதத்துக்கு தெத்தம்பண்ணி எழுதிக்கொடுத்த தாம்பிற சாசனப் பட்டயம். நாங்கள் யெந்த நாட்டிலே யெந்த ஊருலே யிருந்தாலும் யெங்கள் கோத்திறத்தாள் தலைக்கட்டு ஒன்றுக்கு னாகறம் பணம் அஞ்சு வருஷம் பிறதி குடுத்து சஞ்சாரம் வந்தபொழுது சஞ்சாரக் காணிக்கைகளையும் அப்பணைப் படிக்கி ஒபதேசம் பாதபூஜை முதலானதும் பண்ணிக்கொண்டு யெங்கள் வமுசத்தாறு புத்திரபவுத்திர பாறம்பரியமாயி பாத சன்னிதானத்தில் தீட்சை மகாமந்திரம் ஒபதேசம் பண்ணிக்கொண்டு சுவாமியார் தெண்டினை கண்டினை ஆணை ஆக்கினை அபறாதத்துக்குள்பட்டு நடந்துகொள்வோமாகவும். அபுத்திறிகம் சொத்து மடத்துக்கு சேத்தி குடுப்போமாகவும். யெங்கள் கொத்திரத்தார் யெந்த நாட்டிலே ஊரிலே காணிவாங்கி அதிகாரம் பண்ணீனாலும் குடித்தனம் பண்ணினாலும் சுவாமியார் பாதத்துக்கு நடந்துகொண்டு வருவோமாகவும். யிப்படிக்கு நடந்துவரும் காலத்தில் யிதுக்கு விகாதம் சொல்லாமல் பரிபாலனமாயி யெங்கள் வமுசத்தார் பயபக்தியாயி நடத்தி வந்தவன் சுகமாய் தனசம்பத்தும் தான்னிய சம்பத்தும் புத்திரசம்பத்தும் அஷ்டைசுவரியமும் ஆயுளாரோக்கியமும் தேவப்பிறசாதமும் குருப்பிரசாதமும் மென்மேலும் உண்டாகி கல்லும் காவேரிப் பில்லும் பூமி சந்திராதித்தியாள் வரைக்கும் அகிலாண்ட ஈசுவரர் கடாக்ஷத்தினாலே சுகமாயிருப்பார்கள். யிதுக்கு விகாதம் சொல்ல குருநிந்தனை சொன்னவர் கெங்கை கரையிலே காறாம்பசுவையும் பிராமணாள்களையும் மாதாபிதாவையும் கொண்ற தோஷத்திலே போவாறாகவும். யிந்தப்படிக்கி யெங்கள் வமுசத்தாறனைவரும் சம்மதிச்சு பூந்துறை புஷ்பவனீசுவரர் சுவாமி பாகம் பிரியாள் சன்னிதானத்திலே சகிறண்ணியோதக தானமாயி எழுதிக்கொடுத்த தலைக்கட்டு தாம்பற சாசனம். பாகம்பிறியாள் சமேத புஷ்பவனீசுவர சுவாமி சகாயம். பாடகவல்லி சமேத சறுவலிங்கமூர்த்தி சகாயம். மரகதவல்லி சமேத மூவேந்திர சுவாமி சகாயம். தானபால யோர்மத்யே தானாத் ஸ்ரேயோனு பாலனம் தானாத் ஸ்வர்க்க மவாப்னோதி பாலனாத் அச்சுதம் பதம்.

பூந்துறை சின்னத்தம்பிக்கவுண்டன், நல்லதம்பிக்கவுண்டன், பெரியதம்பிக்கவுண்டன் சாச்சி. வாறணவாசிக்கவுண்டன், சின்னவிநாயககவுண்டன், வெள்ளோடு விசுவறாயக்கவுண்டன், கருப்பறாயக்கவுண்டன், பழனிக்கவுண்டன், சென்னிமலைக்கவுண்டன், நசியனூறு பெரிய செங்கோட நல்லதம்பிக்கவுண்டன், கொழந்த மன்னாடிக்கவுண்டன் வெள்ளப்பொறப்பன கவுண்டன், மூத்த மன்னாடிக்கவுண்டன், காசிகவுண்டன், ஆவுடையாக்கவுண்டன், கொழந்தவேல் கவுண்டன், குப்பக்கவுண்டன், முத்துக்கவுண்டன், பழனிக்கவுண்டன், மோளக்கவுண்டன், மருதமலைக்கவுண்டன், பச்சியாக்கவுண்டன், அத்தப்பகவுண்டன், குப்பகவுண்டன், நல்லப்பகவுண்டன், எழுமாத்தூரு கோமறசின்னயகவுண்டன், நல்லயகவுண்டன், அவினாசிக்கவுண்டன், முத்துராமகவுண்டன், கெங்காளிக்கவுண்டன், பொங்காளிக்கவுண்டன், காளியப்ப கவுண்டன், குப்பகவுண்டன், ஊராட்சிக்கோட்டை அருத்தனாரிக்கவுண்டன், பழனிக்கவுண்டன்.
அனுவன்பள்ளி முத்துநல்லய்யன், பெரியமுத்துக்கவுண்டன், முத்துப்பெரியண பழனிக்கவுண்டன், சின்னாயிகவுண்டன், பழனிமலைக்கவுண்டன், காசிக்கவுண்டன், பெரிய ராக்கியாக்கவுண்டன், சின்னத்தம்பிக்கவுண்டன், யீங்கூறு கருமகவுண்டன், பழனிக்கவுண்டன், சென்னிமலைக்கவுண்டன், மருதமலைக்கவுண்டன், முருங்கத்தொழுவு கண்ணுடையாக்கவுண்டன், பெரியசெல்லப்பகவுண்டன், சொக்கநாதகவுண்டன், முத்தப்பகவுண்டன், றாக்கியாக்கவுண்டன், தப்புறாக்கவுண்டன், ராமன்னகவுண்டன், திருவாச்சிபெரியாபொங்காக்கவுண்டன், பெரியகாலியப்பகவுண்டன், பொன்னேகவுண்டன், கருமாண்டகவுண்டன், சோளியப்ப கவுண்டன், ஞானராசாக்கவுண்டன், பெருந்துறை செல்லப்பகவுண்டன், நல்லேகவுண்டன், பழனிக்கவுண்டன், கருப்பகவுண்டன், யெலவமூலை பெரியசின்னயகவுண்டன், சின்னயகவுண்டன், காலிங்கராயக்கவுண்டன், வீரமலைக்கவுண்டன், பழனிக்கவுண்டன்,

காளமங்கலம் சின்னாயிக்கவுண்டன், பெரியண்ணகவுண்டன், நல்லப்பகவுண்தன், குட்டியண்ணக்கவுண்டன், ராசாக்கவுண்டன், முத்துக்கவுண்டன், வெள்ளக்கவுண்டன், கருப்பகவுண்டன், கொழந்தவேல்கவுண்டன், வெத்திவேல்கவுண்டன், பெரியசெல்லப்பகவுண்டன், ஊத்துக்குளி முத்துவேலாயுதகவுண்டன், பெரிய வேலன்ன குட்டியாக்கவுண்டன், குப்பகவுண்டன், பழனிக்கவுண்டன், சத்தியமங்கலம் செல்லப்பகவுண்டன், கொழந்தவேல் கவுண்டன், வெத்திவேல்கவுண்டன், பெரியசெல்லப்பகவுண்டன், மொடக்குறிச்சி கருமாண்டக் கவுண்டன், சின்னமுத்துக்கவுண்டன், பெரியவடமகவுண்டன், கொமறண்ணகவுண்டன், கிளாம்பாடி பாம்பகவுண்டன், கொமரசாமிசின்னாக்கவுண்டன், பெரியசெங்கோடகவுண்டன், சின்னபழனிவேல் கவுண்டன், குப்புச்சிகவுண்டன், முத்துக்கவுண்டன், கொமரவேல் கவுண்டன், வெத்திவேல்கவுண்டன்.
கொளாநல்லி பெரியகொமாரக்கவுண்டன், சின்னப்பொங்காளிக்கவுண்டன், குப்பகவுண்டன், பெரியகுமாறகவுண்டன், முத்துரங்கவுண்டன், திருமலைராயக்கவுண்டன், குப்பணகவுண்தன், வெள்ளைக்கவுண்டன், பெடாரியூர் பெரியதம்பிக்கவுண்டன், சென்னிமலைக்கவுண்டன், குப்பணகவுண்டன், கொல்லங்கோவில் பேரோடு கொமாறநல்லயகவுண்டன், கொமறசின்னயகவுண்டன், முத்துக்கருமணகவுண்டன், முத்துராக்கியாக்கவுண்டன், பெரியசெங்கோடகவுண்டன், சீரங்கராயகவுண்டன், கொடுமணல் பெரியசிவமலைக்கவுண்டன், குட்டியணகவுண்டன், சின்னய கவுண்டன், பொன்னயன், காகம்திருமலைக்கவுண்டன் , பழனிக்கவுண்டன், வேலப்பகவுன்டன் இந்தப்படி சகலசனங்கள் கையிநாட்டு.

இவர்கள் சம்மதியில் சாசனம் எழுதினவன் ஈரோட்டு நாகாசாரி மகன் அளகாத்திரி ஆசாரி கை எழுதி அடிச்சது.

- இவ்வாறாக பூந்துறை நாட்டு கவுண்டர்கள் எழுதிக் கொடுத்துள்ளனர். எழுதப்பட்டது 1336AD விஜயநகர முதல் அரசர் புக்கராயர் காலத்தில். மேற்கண்டவர் தற்போதைய குலகுரு. இவர் பத்து வருடங்களுக்கு முன்வரை ஒவ்வொரு உராகச் சென்று ஆசிவழங்கி வந்தார். கிழே வடக்குத்தயிர்பாளையம் என்ற கிராமத்தில் 1973 ஆம் வருடத்தில் சுவாமியார் சஞ்சாரம் எழுதிய காணிக்கைக் கணக்கு அன்றைய கணக்கு நோட்டிலிருந்து கொடுக்கப்பட்டுள்ளது: .







காலிங்கராயன் செப்பேடு
மூலம்

ஸ்வஸ்திஸ்ரீ விஜயாப்த்புதய சாலிவாஹந சகாப்தம் 1253 கலியப்தம் 4432யிது மேல் செல்லாநின்ற ப்ரஜோத்பத்தி வருஷம் உத்தராயணமும் வ்ருஷப மாசமும் சுக்ல பக்ஷமும் பிரதிமையும் குருவாரமும் ரேவதி நக்ஷத்ரமும் சுபநாமயோகமும் கௌலவாகரணமும் பெத்த சுபதினத்தில் ஸ்ரீராஜாதிராஜ ராஜபரமேஸ்வர ராஜ மாத்தாண்ட உத்தணடராஜ தேவாண்டராஜ பிரதாப வீரப்பிரதாப நரபதி மயிசூரு கிருஷ்ணராஜ உடையாறய்யறவர்கள் ஸ்ரீரத்ன சிங்காஜநரூடராய் ப்ருதிவி ஸாம்ராஜ்யம் அருளாநின்ற காலத்தில் மயிசூருக்குச் சேந்த கொங்குதேசம் மேல்கறைப் பூந்துறைநாட்டுக்குச் சேந்த பேரோட்டுக்கு பிரதிநாமதேயமான விருப்பாக்ஷிபுரத்திலேயிருக்கும் ஸ்த்யோஜாத ஞானசிவாசாரியாற் யிம்முடி அகிலாண்டதீக்ஷித ஸ்வாமியாறவற்கள் பாத சன்னிதானத்துக்கு பூந்துறை நாட்டுக்குச் சேந்த வெள்ளோடு தென்முகம் கனகபுரம் யெலவமலை சாத்தந்தை கோத்திரமானகுருகடாஷத்துனாலேயும் வேதநாயகியம்மன் வறபிறசாதத்துனாலேயும் வாணியை அணையாயிக் கட்டி கொங்கு தேசம் பூந்துறைனாட்டில் சென்னெல் வைத்தவறான பட்டக்காறர் யிம்முடி காலிங்கறாயக் கவுண்டரவர்கள் குருசுவாமியார் பாதத்துக்கு எழுதிக்கொடுத்த தாம்பற சாசனம்.

னான் மகாமந்திர உபதேசம் பண்ணிக்கும்போது குருசுவாமியார் அப்பணையானது. உங்கள் வமுசத்தாற் பெரியோருகள் பூந்துறை னாட்டுலே அதிகாரம் செலுத்தி அணையும் கட்டி நமக்கு குருக்கள் மானியமும் குடுத்து சஞ்சார காணிக்கையும் தலைக்கட்டு வரியும் குடுத்து வந்தாற்கள். யிப்போ ஊத்துக்குளி சீமையிலே ஒங்கள் பெயரற்கள் காணிவாங்கி அதிகாறம் செலுத்தறபடியினாலே வெகு சமூகம் நமக்கு ஞாபகம் யிருக்கும்படிக்கி சாசனம் எழுதிக்கொடுக்கச்சொல்லி சுவாமி சன்னிதானத்திலே அப்பணையானபடிக்கி குருசுவாமியாற் பாதத்துக்கு ஒடல் உயிற் பொருள் மூன்றும் தெத்தம்பண்ணி எழுதிக்கொடுத்த தாம்பற சாசனம். தீட்சை மகாமந்திற ஒபதேசம் பண்ணிக்கொண்டு வறுஷம் பிரதி தலைக்கட்டு காணிக்கை னாகறம் பணம் னாலு குடுத்து சஞ்சாரம் வந்தபோது சஞ்சாறக் காணிக்கையும் குடுத்துவறுவோமாகவும். ஆதீனத்து சிவபூசை மீனாட்சி சுந்தறேசுவற சுவாமிக்கு பிறதோஷக் கட்டளை நடப்பிவிக்கும்படி சன்னிதானத்திலே அப்பணையானபடிக்கி நடப்பிவிக்குறது. அபிஷேகம் மேறைக்கி வருஷம் ஒன்னுக்கு பொன் 36 பிரதோஷக் கட்டளை சாசுவதமாயி நடப்பிவிக்குற படிக்கி னாங்கள் யெந்த னாட்டிலே யெந்த தேசத்துலே யென் வமுசத்தாற் காணிவாங்கி அதிகாரம் பண்ணி பட்டம் செலுத்தினாலும் யிந்தப்படிக்கி வருஷம் பிரதி நடத்திவறுவோமாகவும். சுவாமியாரிட்ட தென்டனை கண்டினை ஆக்கினை அபறாதத்துக்கு உள்பட்டு நடந்து வறுவோமாகவும்.

யிப்படிக்கி நடந்துவருங்காலத்தில் யென் வமுசத்தாற் யிதுக்கு விகாதம் சொல்லாமல் சன்னிதானத்துக்கு பயபக்தியாயி நடத்திவைத்தவன் சுகமாயி தனசம்பத்தும் தான்னிய சம்பத்தும் அஷ்டைஸ்வர்யமும் ஆயுளாறோக்கியமும் தேவபிரஸாதமும் குரு பிஸாதமும் மென்மேலும் உண்டாயி கல்லு காவேரி புல்லு பூமி ஆசந்திரார்க்க உள்ளவறைக்கும் பாடகவல்லி சறுவலிங்கமூர்த்தி அகத்தூறம்மன் கடாக்ஷத்துனாலே சுகமாயி யிறுப்பாற்கள். யிந்த சாசனம் பாத்து படித்தபேறும் செவியில் கேட்ட பேறும் சுகமாயி யிறுப்பாற்கள். யிதுக்கு விகாதம் சொல்லி குரு நிந்தநை சொன்னவன் கெங்கைக் கறையிலே காறாம் பசுவையும் பிறாமணாளையும் மாதா பிதாவையும் கொண்ண தோஷத்துலே போவாறாகவும் யிந்தப்படிக்கி பவாநி வேதநாயகி சங்கமேஸ்வர சுவாமி சன்னிதானத்திலே ஸஹிரண்யோதக தாராபூறுவமாயி யெழுதிக் கொடுத்த தாம்பற சாசனம். வேதநாயகி ஸமேதர சங்கமேசுவர ஸ்வாமி ஸஹாயம். மீநாக்ஷி ஸுந்தரேஸ்வர ஸ்வாமி ஸஹாயம் அகத்தூறம்மன் துணை.

தாநபாலன யோர்மத்யே தாநா ஸ்ரயோநு பாலனம் தானாத் ஸ்வர்க்க மவாப்நோதி பாலநாதி அச்சுதம் பதம்:
ஸ்வதத் தாத்வி குணம் புண்யம் பரதத்தாநு பாலநம் பரத்தாப ஹரேண ஸ்வதத்தாம் நிஷ்பலம் பவேது:

ஊத்துக்குழி காலிங்கறாயக்கவுண்டற் யிவற் சம்மதியில் யிந்தச் சாசனம் எழுதினவன் பவாநி கூடல் அருணாசலாசாரி மகன் சொக்கலிங்காச்சாரி கய்யெழுத்து .

- இவ்வாறு 1331 ஆம் வருடம் காலிங்கராயன் வாய்க்கால் ஏற்படுத்திய காளிங்கராயக் கவுண்டர் எழுதி அளித்துள்ளார் .


மேலும் மங்கிலியவரி பற்றி மற்றொரு செப்பேடும் உள்ளது.

தற்போதைய முகவரி:
ஸ்ரீ சாம்பசிவ தீக்ஷதர்,
மீனாக்ஷி நிலையம்,

26, வடக்கு ரதவீதி,
திருவானைக்காவல்,
திருச்சி -620005.

முன்றாவது மகன் கண்ணன் செல்: 8870020624


கிழே இக்குலகுருவுக்குக் கட்டுப்பட்ட கூட்டங்களின் பட்டியல் :
கவி காளமேகபுலவரும், பாசூர் மடமும்:




FOR MORE INFORMATION: http://pasurmatam.blogspot.com 

கட்டுரை ஆசிரியர் தொடர்பு: 0424 - 2274700

free hit counters
free hit counters

Tuesday, September 22, 2009

கொங்கு குலகுருக்கள் 2. சிவகிரி மடம்

ஸ்ரீஸ்ரீ சிவசமய பண்டித குரு சுவாமிகள்




























































காணிகள் -கோத்திரங்கள்:

1. தலையநல்லூர் - கூரை கோத்திரம், விளையன் கோத்திரம்
2. காஞ்சிக்கோயில் - செம்பன் கோத்திரம், கண்ணன் கோத்திரம்
3. மொளசி - கண்ணன் கோத்திரம்
4. படைவீடு - கூரை கோத்திரம்
5. கந்தம்பாளையம் - கூரை கோத்திரம்

6. தோளூர் - காடை கோத்திரம்
7. அவினாசி - செம்பன் கோத்திரம்
8. பிடாரியூர் - கூரை கோத்திரம்
9. மோகனூர் - மணியன் கோத்திரம்
10. காளிங்கராயன்பளையம் - கூரை கோத்திரம்
11. காக்காவேரி - விளையன் கோத்திரம்
12. பரமத்தி - பொருள்தந்த கோத்திரம்
13. பில்லூர் - காடை கோத்திரம்
14. ஒடுவங்குறிச்சி - ஆந்தை கோத்திரம
15. ஆரியூர் - வேண்டுவன் கோத்திரம்
16. கார்வழி - அழகன் கோத்திரம்
17. கத்திக்காரன்கொம்பு - காடை கோத்திரம்
18. ஓலப்பாளையம் - மணியன் கோத்திரம்

தற்பொழுது சிவகிரி மடாலயம் வேலை நடந்துகொண்டுள்ளது.


முகவரி:

சிவகிரி ஆதீனம்,
சிவகிரி அஞ்சல்,
ஈரோடு மாவட்டம் - 638109
மின்னஞ்சல்: sivagiriathinam@gmail.com
பிளாக்: http://sivagiriathinam.blogspot.com/
தொலைபேசி: 04204- 240324
செல்: 94435- 63354









Monday, September 21, 2009

கொங்கு குலகுருக்கள் 3. திருச்செங்கோடு ஸ்ரீமது சுப்பிரமணிய பண்டித குருசாமிகள் மடம்

ஸ்ரீமது சுப்பிரமணிய பண்டித குருசாமிகள் திருமடம்
























காணிகள் - கோத்திரங்கள்:

1. மோரூர் - கண்ணன் கோத்திரம்
2. மொடக்குறிச்சி - தூரன் கோத்திரம்
3. கிழாம்பாடி - கண்ணன்
4. குமாரமங்கலம் - தூரன், வில்லி, விழியன், பாண்டியன், ஈஞ்சன்

----------------------------------


திருச்செங்கோடு எட்டுக்கோத்திரத்தார் செப்பேடு


ஸ்வஸ்திஸ்ரீமத் மகாமண்டலேசுவர அரியராய விபாடன் பாஷைக்குத் தப்புவராய கண்டன் மூவராய கண்டன் துலுக்கதள விபாடன் ஒட்டியதள விபாடன் கண்டநாடு கொண்டு கொண்டநாடு கொடாதான் ராஜாதிராஜன் ராஜமார்த்தாண்டன் ராஜகெம்பீரன் ராஜபரமேசுவரன் ராஜமனோகரன் போருக்கு வீமன் புயபலவீரன் சொல்லுக்கு அரிச்சந்திரன் உத்தம குணத்தான் ஒரு சொல்லுக்கு வாசகன் பத்திவரதன் பரசுராமனைப்போலவும் அஜபதி கஜபதி நவகோடி நாராயணன் கெசவேட்டை கண்டருளிய பூர்வ தெட்சிண பச்சிம உத்தர சப்த சமுத்திர தேசாதிபதியாகிய ஸ்ரீ விஜயமாநகரில் பிறதாபரான ராஜேந்திரசோழன் மனுநீதி கொண்ட சோழன் கொங்கணராயன் பூறுவதேவர் பிருத்வி ராஜ்யபாரம் பண்ணி அருளாநின்ற காலத்தில்

நீதிபர ஆறில் ஒரு கடமைகொண்ட சேரன் சோழன் பாண்டியன் மூவராஜாக்களும் செல்லாநின்ற ஸ்வஸ்திக் கலியுக சகாப்தம் வருஷம் 4029க்கு மேல் செல்லாநின்ற விபவ நாம சம்வத்சரம் உத்தராயணம் மகர மாச பூர்வபட்ச குருவாரம் சதுர்த்திசிஉயும் விசாக நட்சத்திரமும் பாலவாகரணமும் அமுர்த சித்த்யோகமும் பெத்த சுபதினத்தில் கொங்கு நாட்டில் ஸ்ரீமது முள்வாய்சூழ் துரைத்தனத்து சங்ககிரி துர்க்கத்துக்கு சேர்ந்த கீள்கரைப் பூந்துறை நாட்டில் கொங்குமண்டலம் தெட்சிண காலாசத்தில் அர்த்தநாரீசுவரர் கிருபாகடாட்சத்துனாலே சேரன் சோழன் பாண்டியன் மூணு ராசாக்களும் கொங்கு தேசம் வந்து பார்க்கவேணும் யென்று சேனைகளோடு புறப்பட்டு வந்து இருப்பார். அந்தக் காலத்தில் கொங்கு தேசத்து ராசன் அரூபத்தை அடைந்தான் என்று சங்கதி தெரிந்து மூணு பேரும் ஒரு ஸ்தலத்திற்கு வந்துசேனைகளோடே இருந்துகொண்டு சிவ ஸ்தலங்கள் விஷ்ணு ஸ்தலங்கள் பிரபல்யம் செய்துகொண்டு வந்தார்கள்.

வரும்போது கோதையூருக்கு வரும்போது மலை சார்வில் அநேக ஆச்சரிய விஷயங்களைக் கண்டு சுவாமி அனுக்கிரகத்தினால் சிவ ஸ்தலங்கள் விஷ்ணு ஸ்தலங்கள் ஜீரணோத்தாரணம் பண்ணி சோபானமார்க்கங்கள் குளங்கள் தடாகங்கள் உண்டாக்கி பந்தியா பாஷணத்தில் சிவாலய பிரதிஸ்ஃடையும் பண்ணி சுவாமி பூசைக்கு ஆதிசைவாளை நேமுகம் செய்ய வேணும் என்று மூணு ராஜாக்களும் கூடி சீர்காழியில் சோமசம்பு சிவாச்சாரியார் குமாரன் குலசேகரபட்டர் இருக்குறார் அவருக்குத்தான் இந்த ஸ்தல மகத்தியம் தெரியும் என்று அவரை அழைச்சு வரவேணும் என்று மூணு ராஜாக்களும் யோசனை செய்து அவரை போய் அழைத்துவந்து கும்பாபிஷேகம் முதலானதுகள் செய்து திருச்செங்கோடு என்ற நகரம் உண்டாக்கி சைவாகம விதிப்படிக்கு பூசை கொண்டருளிய குலசேகரபட்டருக்கு நானூத்தித் தொண்ணூற்றாறு பொன் ரேகை மானியம் விட்டு சூலக்கல்லும் ஸ்தாபிச்சு வாதுளாகம விதிப்படி பஞ்சாட்சர உபதேசம் மூணு ராஜாக்களும் குலசேகரபட்டரிடத்தில் பெற்றுக்கொண்டு

நற்குடி நாற்பத்தெண்ணாயிரம் பசுங்குடி பன்னீராயிரம் ஏர்குடி எண்ணாயிரம் காராளர்களைத் தருவிச்சு வைத்து யாபாரஸ்தாளை ஸ்தாபிதம் செய்து கொங்கு இருபத்துநாலுநாட்டுக்குப் பட்டக்காரன் எற்படுத்தி இருபத்தி நாலு பட்டக்காரர்கட்கும் பட்டத்தைச் சூட்டி ஒரு தலை போனால் தங்கத்திலே ஏழு தலை பத்துப்பொன் அபராதம் வாங்கும்படியாய் ஆக்ஞாபிச்சுவிட்டு ஸ்தலங்கள் தோறும் பரிபாலனம் பண்ணிக் கொண்டு காசியில் கெங்கா ஸ்நானம் பண்ணுவதற்கு மூணு ராஜக்களும் போய்விட்டார்கள்.

கீழ்க்கரைப் பூந்துறைநாட்டில் மோரூரில் வேளாள கண்ணர்குல கோத்திரம் பூஷறசூத்ரம் நல்லதம்பி கொங்கு மண்றாடியானும் இம்முடி நல்லதம்பிக் காங்கயன் சூரிய காங்கயன் குமாரகாங்கயன் அத்தப்ப காங்கயன் மேல்கரை பூந்துறை நாட்டில் முடக்குறிச்சியில் இருக்கும் வேளாள தூர குல கோத்திரம் பூஷற சூத்திரம் அத்தப்ப சர்க்கரை மன்றாடியார் குட்டைய கவுண்தர் பிச்சாண்டாக்கவுண்டன் குட்டிக்கவுண்டன் நல்லதம்பிக்கவுண்டன் கிளாம்பாடியில் இருக்கும் கண்ணகுல கோத்திரம் வாரணவாசிக்கவுண்டன் ராக்கியாக்கவுண்டன் குமரகவுண்டன் செட்டியாக்கவுண்டன் விலையகுல கோத்திரத்தில் வேலகவுண்டன் வில்லி குலகோத்திரம் அர்த்தநாரிக் கவுண்டன் பாண்டியகுலகோத்திரம் பாண்டிக் கவுண்டன் ஈஞ்சகுல கோத்திரம் அமராவதிக் கவுண்தன் அனைவரும் கூடி

கீழ்க்கரைப் பூந்துறை நாட்டில் திருச்செங்கோட்டில் அர்த்தநாரீஸ்வர சுவாமி சந்நிதியில் சைவாகம விதிப்படி பூசைகொண்டருளிய குலசேகர பட்டரிடம் நாங்கள் எட்டுக் கோத்திரத்தாரும் பட்டக்காரர்களும் அனைவரும் வாதுளாகம விதிப்படி பஞ்சாட்சர உபதேசம் பெற்றுக்கொண்டு சுவாமியார் குலசேகரபட்டருக்கு சிவபூசைக்கு மடாலயம் கட்டி குரு பிரதிஷ்டையும் செய்து பிராமண சம்வர்த்தனையும் செய்து மடத்துக்கு சிவபூசைக்காக கலியாணமானவர்களுக்குப் பாதகாணிக்கை மதுரை சக்கரம் இரண்டு பணம் குடுக்கிறது. இந்தப்படிக்கு நாங்கள் கொடுத்து வருகிறோம் என்று அர்த்தநாரீஸ்வரர் சந்நிதியில் வாக்குத் தத்தம் பண்ணிக்கொடுத்தோம் சுவாமியார் குலசேகரபட்டருக்கு சிவிகை சத்திரை தாமரை கத்தி கடோரி பூச்சக்கரக்கொடை விருதுகள் எல்லாம் கொடுத்து மிரவணையும் செய்து எங்கள் வமிசபாரம் பரியமாக எட்டுக்கோத்திரத்தாரும் குலகுருவாயிருந்து வருஷப்பிரதி எங்களுக்கு தீட்சையும் பிரசாதமும் கொடுத்து பாதகாணிக்கையும் பெத்துக் கொண்து வருகிறது என்று நாங்கள் அனைவரும் கூடி எழுதிக்கொடுத்த செப்பேடு பட்டயம். சந்திராதித்தர் உள்ள வரைக்கும் அனுபவித்துக்கொண்டு சுகத்தில் இருக்க இந்த சுதந்திரம் நாங்களனைவரும் கூடி எழுதிக்கொடுத்தபடிக்கி நடத்தி வைப்போமாகவும்.

இந்த சுதந்திரம் சந்திராதித்தர் உள்ள வரைக்கும் எட்டுக் கோத்திரத்தாரும் நடத்தி வைக்கக் கடவோமாகவும். இதற்கு யாதாமொருத்தன் யிடகூறு செய்தானாகில் கெங்கைக்கரையில் காராம்பசுவைக் கொண்ண தோஷத்தாலும், பிராமணாளைக் கொண்ண தோஷத்தாலும் மடம் தேவாலயம் சின்னப்படுத்திய தோஷத்தாலும் போகக்கடவாராகவும் இந்தப்பட்டயம் எழுதினபடிக்கு பரிபாலனம் செய்து கொண்டு வந்தபேருக்கு திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபாராதனை தெரிசித்த பலனும் சிதம்பரத்தில் மார்கழி ஆருத்ரா தரிசனம் தெரிசித்த பலனும், மதுரையில் சொக்க நாதரையும் மீனாட்சியம்மனையும் தெரிசித்த பலனும், காசியில் கெங்கா ஸ்நானம்பண்ணி விசுவநாதரையும் விசாலாட்சியையும் தெரிசித்த பலனும் கொங்குமண்டலத்தில் தெட்சிண கைலாசத்தில் ஸ்ரீ அர்த்தநாரீசுவர சுவாமியைத் தெரிசித்த பலனும் உண்டாகத் தக்கதாகவும்.

இந்தப்படிக்கு எட்டுக்கோத்திரத்தார் அனைவரும் கூடி குரு பிரதிஷ்டையும் செய்து தீர்த்தப்பிரசாதம் பெற்றுக்கொண்டோம். இதற்கு சாட்சிகள் கீழ்க்கரைப் பூந்துறை நாட்டில் நல்லதம்பி கொங்கு மன்றாடியார் மேல்கரைப் பூந்துறை நாட்டில் அத்தப்ப சர்க்கரை மன்றாடியன் குலோத்துங்கபட்டர் ஆச்சாரிய மறையோரில் கவுணிய கோத்திரம் அர்த்தனாரி அய்யர் பாண்டிய குலத்தில் பாண்டியகவுண்டன் வில்லிகுலத்தில் வேலகவுண்டன் நாட்டு வேலகவுண்டன் இந்தப் பட்தயம் எழுதின நம்பிக்கு அர்த்தநாரீசுவரர் நல்லபுள்ளியம்மன் பொன்காளியம்மன் கரியகாளியம்மன் ரெட்சித்துத் துணை செய்யவும். ஸ்ரீ பாண்டீசுவர சுவாமி சகாயம் பாபவிநாச தீர்த்தக்கரையில் சிலா பிரதிஷ்டையும் விஸ்தாரமாக செய்து இருக்கிறோம்.

---------------------------------


குருக்கள் முகவரி:
எம்.எஸ். விசுவநாத குருக்கள்,
தெற்கு அக்ரகார வீதி,
திருச்செங்கோடு.

செல்: 9443351851

Sunday, September 20, 2009

கொங்கு குலகுருக்கள் 5. காங்கயம் மடம்

கனகசபாபதி பண்டித குருசுவாமிகள் திருமடம்



(பேரூரில் ஒத்தக்கால் மண்டபம் அருகே உள்ளது. சாந்தலிங்க அடிகளார் ஆதீநத்திலிருந்து வேறுபட்டது)


கனகசபாபதி பண்டித குருசுவாமிகள்,
காங்கேயம் மடம், ஓலப்பாளையம், 

தற்போதைய முகவரி
செந்தில்நாத குருக்கள், 
 18/2 , சின்ன கோயில் வீதி, பேரூர், 
கோயம்பத்தூர்
போன்: 93606 97987


காங்கய நாட்டு முதல் மடம்

கொங்கு குலகுருக்கள் 4. எழுகரைச் செல்லன் கோத்திரத்தார் குலகுரு மடம்

திருச்செங்கோடு ஸ்ரீமது குலோத்துங்க வேதநாயக பண்டித குருசாமிகள் திருமடம்.





 










































காணிகள் - கோத்திரங்கள்


1. இலுப்புலி - செல்லன் கோத்திரம்
2. கொன்னையார் - செல்லன் கோத்திரம்
3. கொக்களை - செல்லன் கோத்திரம்
4. பருத்திப்பள்ளி - செல்லன் கோத்திரம்
5. அனுமன்பள்ளி - செல்லன் கோத்திரம்

6. இடையார் - செல்லன் கோத்திரம்
7. எழுமாத்தூர் - செல்லன் கோத்திரம்


முகவரி:
N. மகாதேவன் குருக்கள்,  
குலோத்துங்க வேதநாயக பண்டிதகுருசாமிகள் திருமடம்,
44/101, தெற்கு ரத வீதி ,
(ராமு சைக்கிள் ஸ்டாண்ட்),

திருச்செங்கோடு - 637211
Mob: 94420 01431
Landline: 04288-254972


Saturday, September 19, 2009

கொங்கு குலகுருக்கள் 6. வள்ளியறச்சல் மடம்

சிவத்திரு கனகசபாபதிபண்டித குருசுவாமிகள் திருமடம்


I. ????????? சிவ பிராமணர்


II. கோத்திரங்கள் - காணிகள்:
1.வள்ளியறச்சல் - பில்லன் கோத்திரம்
2.வள்ளியறச்சல் - ஆந்தை கோத்திரம்
3. வள்ளியறச்சல் - செல்லன் கோத்திரம்
4. வள்ளியறச்சல் - காடை கோத்திரம்
5. வள்ளியறச்சல் - கணக்கன் கோத்திரம்

III. கொங்க செட்டியார்

IV.வேட்டுவர்:
௧. மாந்தை வேட்டுவன்
௨. பில்ல வேட்டுவன்

V.திருக்கணக்கன்

VI.நீலன், நீருண்ணி

முகவரி:
வள்ளியரச்சளிளிருந்து ஓலப்பாளையம் செல்லும் வழியில் முதல் இடது தடத்தில் வீடு உள்ளது. மாந்தீஸ்வரர் கோயில் அல்லது அழகு நாச்சியம்மன் கோயிலில் குலகுரு சாமியார் என்று விசாரிக்கலாம்.

செல்: 93600 15891, 94432 70511

போன்: 04257 - 255069

1 comment:

  1. If Anybody Know the details about the Thalayoor Matam(Near Dhaaraapuram) And Bodi
    Sivajaathi matam (near Theni)

    ReplyDelete